நாட்டின் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பணவு 94 பேருக்கு வழங்காது 70 ஆயிரம் ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் ஹோமாகம பிரதேச செயலாளர் பிரிவு காரியாலயம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேலும் ஹொமாகம மாகம்மன கிழக்கு 590 கிராம சேவை பிரிவுக்குட்பட்ட கிராம சேவை அதிகாரியினால் இரண்டாவது முறையாகவும் வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பணவு 94 பேருக்கு வழங்கப்படாது மோசடி இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.