அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் உயர்மட்ட உதவியாளருமான ரொபட் ஓ பிரையனுக்கு கொரோனா உறுதி தொற்று செய்யப்பட்டுள்ளது.
ட்ரம்ப்பிற்கு மிகவும் நெருக்கமான அதிகாரியான ரொபட் ஓ பிரையன் தற்போது வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்டுபடுத்தப்பட்டுள்ளார்.
சமீபத்தில் ஐரோப்பாவிலிருந்து நாடு திரும்பிய ரொபட் ஓ பிரையனும் அவரது மனைவியும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் அதிகாரிகளை சந்தித்துள்ளனர்.
மேலும், கடந்த 10 ஆம் திகதி இறுதியாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ரோபர்ட் ஓ பிரையன் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.