நாடு கடத்தப்பட்ட நபர் போதை பொருளுடன் கைது!

@@ 19
@@ 19

மாகந்துரே மதூஷ் அணியின் உறுப்பினரான மொஹம்மட் சித்திக் மொஹம்மட் சியாம் எனப்படும் ஜல்பரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 2 கிராம் 350 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருள் கைவசம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெமட்டகொட பிரதேசத்தினை சேர்ந்த 49 வயதுடைய சந்தேக நபர், மாகந்துரே மதுஷ் உடன் டுபாய் நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.