தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானம்!

z new350
z new350

நாட்டில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகள் வாக்களிப்பு நிலையங்களாக பயன்ப்படுத்தப்பட உள்ளமையால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுமார் 03 மாதங்களுக்கும் அதிககாலம் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் கடந்த 06 ஆம் திகதி முதல் 04 கட்டங்களின் கீழ் ஆரம்பிப்தற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இதற்கமைய மூன்றாவது கட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படவிருந்த பாடசாலைகள் கொரோனா காரணமாக 02 வாரங்கள் மேலதிக விடுமுறைகளுக்கு அமைய ஒத்திவைக்கப்பட்டன.

இதன்படி, தரம் 11 ,12 மற்றும் 13 ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக கடந்த 27 ஆம் திகதி பாடசாகைளில் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.