பாடசாலை மீது மரம் சாய்ந்ததில் பலத்த சேதம்!

unnamed file 14
unnamed file 14

நாடடின் பத்தனை புதிய திஸ்பனை பகுதியில் இன்று மாலை கடும் காற்றுடன் கனமழை பெய்ததையடுத்து, திஸ்பனை தமிழ் வித்தியாலயத்திற்கு அருகில் இருந்த பாரிய மரம் ஒன்று வேருடன் சாய்ந்ததால் வித்தியாலயம் மற்றும் அருகில் இருந்த வீடு ஆகியவை பலத்த சேதம் அடைந்துள்ளன.

இதன் போது உயிர் சேதம் இல்லை என்றும் உடமைகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டு உள்ளது என்றும் குறித்த வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளதுடன் மின் கம்பிகளும் அருந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இது விடயமாக அப்பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகர் ஊடாக பிரதேச செயலாளருக்கு அறிவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.