முதலாம் தரம் தொடர்பாக கல்வி அமைச்சு தெரிவித்தது என்ன?

625.500.560.350.160.300.053.800.900.160.90 36

முதலாம் தரத்தில் இணைத்துக் கொள்ளும் மாணவர் களின் எண்ணிக்கையை 35 – 40 வரை அதிகரிப்பதற்குச் சட்ட ரீதியான அனுமதி கிடைத்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக் கொள்ளும் அடிப்படையில் மாணவர்களின் எண்ணிக் கையினை அதிகரிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகக் கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.
அதற்கமைய பொதுத் தேர்தலின் பின்னர் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

விடுமுறை வழங்கப்பட்டுள்ள அனைத்து அரச பாடசாலை களும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. எனினும் வாரத்தின் 5 நாட்களுக் குள் 5,10,11,12,13 ஆகிய வகுப்பு மாணவர்கள் மாத்திரமே அழைக்கப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித் துள்ளது.