நாளைய வானிலை அறிக்கை!

0000 2
0000 2

நாட்டின் பல்வேறு பாகங்களில் நாளைய தினமும் மழை அல்லது இடியுடன் கூடிய மழையுடனான வானிலை நிலவக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடையிடையே மழைபெய்யக்கூடும் மற்றும் ஊவா மாகாணத்தில் இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும் இதேநேரம், தென் மாகாணத்திலும், மாத்தளை, பொலனறுவை மாவட்டங்களிலும், மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் குறிப்பிடடுள்ளது.

இத்துடன், பேருவலையில் இருந்து காலி ஊடாக செல்லும் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதியில் வீசும் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வீசும் காற்றின் வேகம் 60 முதல் 65 கிலோமீற்றராக அதிகரிக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.