மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளா ஹிருணிகா!

பிரேமச்சந்திர 1
பிரேமச்சந்திர 1

ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக ரணில் – மஹிந்த கூட்டணி திட்டமிட்ட சேறுபூசல்களை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

அதனை நம்பி தவறான முடிவை எடுக்க வேண்டாம் என்றும் மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரித்ததாவது.

“தேர்தல் பிரசாரங்கள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்திக்கும், அதன் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் எதிராக திட்டமிட்ட சேறுபூசல்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வளவு காலமும் அமைதியாக இருந்துவிட்டு தேர்தல் நெருங்கியதுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக ரணில் – மஹிந்த கூட்டணி இவ்வாறான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றது.

பிரசாரங்கள் நிறைவுக்கு வந்ததுடன் எங்களால் அது தொடர்பில் கருத்தும் தெரிவிக்க முடியாது. இதனை உணர்ந்தே இவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.