திட்டங்களை முன்னெடுத்து செல்ல பலமான நாடாளுமன்றம் அவசியம்!

1 15
1 15

இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக்குழு உறுப்பினர்களின் செயற்பாடுகளை இல்லாதொழிக்க தாம் முன்னின்று செயற்படுவதாக வரலாற்று சிறப்புமிக்க களனிய ரஜமகா விகாரையில் கோட்டாபய ராஜபக் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனை அறிவித்துள்ளார்.

அதன்போது மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாகவும் அதற்கு அவர் தன்னுடைய திட்டங்களை முன்னெடுத்து செல்ல பலமான நாடாளுமன்றம் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஜா-எல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி மக்களின் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

மேலும் கம்பஹா வாழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு திட்டங்கள் தம்மிடம் உள்ளதாகவும் விரைவில் அவர்களின் பிரச்சினைகளுக்கான தீரவு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி இதன்போது அறிவித்துள்ளார்.