மக்களின் பணத்தை கொல்லையடித்த அரசியல்வாதிகள் தமது கட்சியில் இல்லை!

IMG 0317
IMG 0317

மக்கள் விடுதலை முன்னணி ஏழைகளின் கட்சி அல்ல என குறித்த கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் அத்துடன், பொது மக்களின் பணத்தை கொல்லையடித்த அரசியல்வாதிகள் தமது கட்சியில் இல்லை எனவும் அவர் குறிப்பிடடுள்ளார்.

அதேபோல்,கடந்த நாடாளுமன்றத்தில் இருந்ததை விட இம்முறை 06 உறுப்பினர்களை தம்முடன் நாடாளுமன்றம் அழைத்து செல்ல எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணி மேற்கொண்டிருந்த தீர்மானங்களால் மக்கள் அதிருப்தி அடைந்திருந்தனர் என சுட்டிக்காட்டிய அவர் குறித்த முடிவுகள் நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்டவை எனவும் தெரிவித்துள்ளார்.