சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பொதிகளில் மர்ம விதைகள் காணப்படுவதாக விவசாயத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தற்போது வரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளனர். இன்னும் இந்த நோயின் தாக்கம் ஒரு சில நாடுகளில் தீவிரமாகித் தான் வருகின்றது. இந்த நோய் முதலில் சீனாவில் இருந்து தான் அனைத்து நாடுகளுக்கு பரவியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு சிலருக்கு சீனாவிலிருந்து மர்மமான விதைகள் பொதிகளில் வந்திருப்பதாகவும் அந்த விதைகள் குறித்து அமெரிக்க விவசாயத்துறை சந்தேகம் அடைந்து இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.