விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலமாகவே பெற்றுகொள்ளப்படும்!

OL
OL

நாட்டில் இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் எதிர்வரும் ஒகஸ்ட் 31 ஆம் திகதி வரை ஒன்லைன் மூலமாகவே பெற்றுகொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி அனைத்து பாடசாலை பரீட்சாத்திகளும் தமது பாடசாலை அதிபர் ஊடாக இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என குறித்த திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

இத்துடன், தனிப்பட்ட பரீட்சாத்திகள் என்ற இணையத்தளம் வாயிலாக தமது விணண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.