ஈ.ரி.ஐ கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய, அதில் வாக்குமூலம் வழங்கி வந்த நான்கு பணிப்பாளர்களும் தற்சமயம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
குறித்த நபர்கள் சுமார் 08 மணிநேரம் அளவில் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாலக்க எதிரிசிங்க, ஜீவக்க எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க ஆகியோர் இன்று முற்பகல் 10.15 அளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.
ஈ.ரி.ஐ நிறுவனத்தின் பணிப்பாளர்களான ஜீவக்க எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோருக்கு கடந்த ஜூன் மாதம் 16 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகேவால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஈ.ரி.ஐ வைப்பாளர்கள் 3 பேரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.