பெளர்ணமி தினத்தில் பிரசார நடவடிக்கையை முன்னெடுக்க அனுமதி மறுப்பு

625.500.560.350.160.300.053.800.900.160.90 1 16

ஓகஸ்ட் மாதம் இடம்பெறும் பெளர்ணமி தினத்தன்று தேர்தல் பிசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அரசியல் கட்சி செயலாளர்கள் முன்வைத்த கோரிக்கை தேர்தல் ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவுடன் அண்மையில் நடந்த கூட்டத்தில், கட்சி செயலாளர்கள் கொரோனா தொற்றின் காரணமாக தங்களது தேர்தல் நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியவில்லை என்று சுட்டிக்காட்டினர்.

இதன் காரணமாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி வீடு வீடாகச் சென்று அல்லது தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.

கொவிட்-19 தொற்று நிலைமையுடன் எதிர்நோக்கிய கட்டுப்பாடுகள் காரணமாக வீடு வீடாகச் சென்று வாக்குகளை இரந்து கேட்டல், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகள் 2020.08.03ஆம் திகதி மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக பரிசீலிப்பதற்கு இணக்கம் தெரிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட போதும், நடைமுறை சட்டத் தடங்கல்கள் காரணமாக, அதனை கைவிட தீர்மானித்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு இதன் போது தெரிவித்துள்ளது

இருப்பினும், ஒகஸ்ட் 2 ஆம் திகதி நள்ளிரவில் விளம்பர பிரச்சாரம் முடிவடைந்ததாலும், மேலும் பல பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால் இதற்கு அனுமதி வழங்க முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு  தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.