நீதிமன்றில் ஷானி அபேசேகரவை முன்னிலைப்படுத்த நடவடிக்கை!

1596163862 Shani 2
1596163862 Shani 2

கைதுசெய்யப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றவியல் பிரிவினர் சில மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்த நிலையில், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சிரேஷ் காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர கொழும்பு குற்றவியல் பிரிவினரால் நரஹேன்பிட்டியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன தொடர்பான வழக்கின் துப்பாக்கியை பொறுப்பேற்றமை தொடர்பான சாட்சியை மறைத்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.