அரயலமைப்பின் 16ம் திருத்தம் மூலம் தமிழ் மொழி வட-கிழக்கின் நிருவாக மொழி ஆகி விட்ட விஷயம் அறியாத படிக்காத முட்டாள் தற்குறி விமல் வீரவன்ச. அவருடன் கூட்டுக்குடித்தனம் செய்யும் டக்லஸ், தொண்டமான், அதாவுல்லா போன்றோர் இவருக்கு எழுத படிக்க கற்றுக்கொடுத்து, அரசியலமைப்பையாவது வாசிக்க பழக்க வேண்டும்.
தமிழ் மொழி முழு இலங்கையின் இன்னொரு ஆட்சி மொழி
என்பதையும், தமிழ் மொழி வட-கிழக்கின் நிருவாக மொழி என்பதையும் இந்த தமிழில் பேசும் மூன்று கோட்டா ஆதரவு கூட்டு குடித்தன அரசியல்வாதிகளும் அறிவார்கள் என நம்புகிறேன்.
எங்களுக்கும் இது தெரியாதே என என் நம்பிக்கையில் மண்ணை போட்டு விடாதீர்களப்பா என இவர்களை வேண்டுகிறேன் என வத்தளையில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.