உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை மாத்திரமே உபயோகிக்க முடியும்

211

தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் , கடவுச் சீட்டு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை என்பவற்றில் ஏதேனுமொரு அடையாள அட்டையையும் கொண்டிருக்காத நபருக்கு வாக்களிப்பளிப்பிற்கு அனுமதியளிக்கப்பட மாட்டாது என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேற்கூறப்பட்டவாறு செல்லுபடியாகும் அடையாள அட்டையும் எதனையும் கொண்டிராத வாக்காளர்கள் தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையையேனும் வைத்திருக்க வேண்டும். ஏற்றுக் கொள்ளப்படும் அடையாள அட்டை எதுவும் இல்லாத ஆளொவருக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படமாட்டாது என்றும் , அதன்படி கடமையை ஆற்றுமாறு உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.