தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் நீடிப்பு

4

தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் ஒரு மணித்தியாலயத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்க முடியும். கடந்த அனைத்து தேர்தல்களிலும் காலை 7 மணி முதல் மாலை 4 வரை மாத்திரமே வாக்களிப்பதற்கான நேரம் வழங்கப்பட்டது. எனினும் தற்போது முன்னரைப் போன்றல்லாமல் கொரோனா அச்சம் காரணமாக புதியதொரு வழமையான சூழலில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

எனவே சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலோசனைகளுக்கு அமைய இம்முறை வாக்கெடுப்பினை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. இதன் காரணமாக வழமையை போன்றல்லாமல் நபரொருவர் வாக்களிப்பதற்காக நேரம் அதிகமாகும் என்று தேர்தல் ஒத்திகைகளின் போது கணிப்பிடப்பட்டது. அதற்கமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.