நாடாளுமன்ற தேர்தல் நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில், கொழும்பு பங்குச் சந்தை நாளை இடம்பெறவுள்ள பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை பிற்பகல் 12.30 மணி வரை மாத்திரம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.