சுமந்திரனனுக்கு எதிர்ப்பை வெளியிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள்!

IMG 5095
IMG 5095

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்திற்கு வருகை தந்த நிலையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களும் அங்கு கூடியி்ருந்தவர்களும் தமது எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் சிறப்பு அதிரப்படையினர் தடியடி நடத்தியுள்ளனர்.

அதனால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. எனினும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்புக்கும் மத்தியிலும் சுமந்திரன் சுமார் 15 நிமிடங்களில் கடும் பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்துக்கு அதிகாலை 1.40 மணியளவில் கடும் பாதுகாப்புடன் வருகை தந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தின் போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வலி. தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராசா துவாரகன் மீது பொலிஸாரும் சிறப்பு அதிரடிப்படையினரும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அதனால் அவர் படுகாயமடைந்துள்ளார்.

அத்தோடு வேடிக்கை பார்த்த, செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் மீதும் அதிரடிப் படையினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இனி எல்லாமும் மாறும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் சிவில் அதிகாரிகளுடன் முரண்பட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.