பல பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றமை குறிப்பிடதக்கது.
இதன் காரணமாக இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் எஹலியகொட பகுதியில் மரமொன்று சரிந்து விழுந்துள்ளது.
இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் பயணிப்பவர்கள் மாற்று வழியில் பயணிக்குமாறு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.