மீண்டும் வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களை தாயகம் அழைத்துவரும் செயற்பாடு ஆரம்பம்!

9cdf6 5 1
9cdf6 5 1

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வௌிநாட்டில் தங்கியிருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடு இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக வௌியுறவு தொடர்பான ஜனாதிபதி ​மேலதிக செயலாளர் ஓய்வு பெற்ற அத்மிரால் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்றைய தினம் இந்தியா, தோஹா கட்டார் மற்றும் மாலைத்தீவில் இருந்து விமானங்கள் மூலம் இலங்கையர்கள் இந்நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

இந்தியாவில் இருந்து 185 பேரும், மாலைத்தீவில் 187 பேரும் மற்றும் தோஹா கட்டாரில் இருந்து 17 இலங்கையர்களும் இவ்வாறு இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.