கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள அபிஷேக் பச்சன்!

Abhishek Bachchan
Abhishek Bachchan

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள்.

இதில் ஐஸ்வர்யா ராய், ஆராத்யா இருவருக்கும் லேசான தொற்று ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் முதலில் குணமாகி வீடு திரும்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று அமிதாப் பச்சனும் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். ஆனால், அபிஷேக் பச்சனுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியானதால் தொடர் சிகிச்சையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

இது தொடர்பில், அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டில் இன்று பிற்பகல் நான் கொரோனா பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது. இதை நான் வெல்வேன் என்று சொன்னேன். எனக்கும் எனது குடும்பத்துக்கும் நீங்கள் செய்த பிரார்த்தனைகளுக்கு அனைவருக்கும் நன்றி.

மேலும், நானாவதி மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் தாதி ஊழியர்களுக்கு அவர்கள் செய்த எல்லாவற்றிற்கும் எனது நன்றி என கூறியுள்ளார்.

இந்தியாவில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,091,810 ஆக காணப்படுவதோடு அங்கு மொத்தமாக 42,626 பேர் குறித்த தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.