குருநாகல் மேயருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

Protest 1 720x380 1

குருநாகல் கடிகார கோபுரத்திற்கு முன்பாக மேயர் துஷார சஞ்சீவ விதாரனவின் ஆதரவாளர்களால் இன்று (திங்கட்கிழமை) அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குருநாகல் மேயர், தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் உட்பட ஐந்து பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக குருநாகலில் இவ் அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த புவனேகபாகு மன்னனின் அரச மண்டபம் உடைக்கப்பட்ட விவகாரத்தில் குருநாகல் பிரதேச மேயர், நகர சபை ஆணையாளர் மற்றும் நகர சபையின் பிரதான பொறியியலாளர் உட்பட மேலும் இருவரை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கடந்த 6ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்களை கைது செய்வதற்காக 4 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.