மில்லனிய, பெல்லன்துடாவ பகுதியில் சமூக வலைத்தளமூடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொண்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 20 பேரில் 5 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் போதைவில்லைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தெஹிவளை, பாணந்துறை, கடுவள ,பொரலஸ்கடுவ பகுதிகளைச் சேர்ந்தவர்களே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.