சமூக வலைத்தள களியாட்ட நிகழ்வில் 20 பேர் கைது

Facebook Party

மில்லனிய, பெல்லன்துடாவ பகுதியில் சமூக வலைத்தளமூடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 20 பேரில் 5 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் போதைவில்லைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தெஹிவளை, பாணந்துறை, கடுவள ,பொரலஸ்கடுவ பகுதிகளைச் சேர்ந்தவர்களே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.