4 ஆயிரத்து 960 போதை மாத்திரைகள் கண்டுபிடிப்பு!

கடதாசி பெட்டியில் மறைத்து உள்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட போதை மாத்திரைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பறற்றப்பட்டுள்ளது.

இதன்போது 4 ஆயிரத்து 960 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி 24.8 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்றின் ஊடாக ஆடைகள் இறக்குமதி செய்வதாக தெரிவித்து இவ்வாறு போதை மாத்திரைகள் இறக்குமதி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காவற்துறை போதை பொருள் ஒழிப்பு பிரிவு மேற்கொண்டுள்ளது.