மூன்று கர்ப்பிணி பெண்கள், மகப்பேற்று காலம் நெருங்கிய காரணத்தால், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் முல்லைத்தீவு – கேப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் இருந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (புதன்கிழமை) குறித்த மூவரும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டில் இருந்து வருகைதந்த 256 பேர், ஓகஸ்ட் 9ஆம் திகதியன்று, கேப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலைத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர்.