தாயக நிலப்பரப்பிலே பல மாவட்டங்கள் பறிபோய் கொண்டிருக்கின்றன; கஜேந்திரகுமார்

kajenthirakumar
kajenthirakumar

தாயக நிலப்பரப்பிலே பல மாவட்டங்கள் பறிபோய் கொண்டிருக்கின்றன வன்னி மாவட்டத்தையும் அந்த நிலைக்கு கொண்டு செல்கின்றார்கள். என தமிழ் தேசிய மக்கள் முண்ணயின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்துள்ளார்.

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இதனை தெரிவித்தார்.

அப்பொழுது அங்கு கருத்து தெரிவித்த அவர் எமது உரிமைகைளை அனுபவிக்க கூடிய வகையிலே தமிழ் தேசத்தின் அங்கீகாரம் பெற்ற ஒரு அரசியல் தீர்வை நோக்கி பயணிப்போம். எனவும் இன்று புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்படவிருக்கின்றது. அது ஒரு ஒற்றையாட்சியாக இருக்கப் போகின்றது. அதனை ஆதரிக்க போவதாக கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருக்கின்றது.

மேலும் இவர்கள் அனைவரும் இணைந்து தமிழ் மக்கள் தாங்களாகவே விரும்பி ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக உலகிற்கு காட்ட முனையும் செய்தியை நாம் முறியடிக்க வேண்டும் அந்த புதிய அரசியலமைப்பானது சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்பட்டால் வடகிழக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஏகோபித்த எதிர்ப்பை நிலை நாட்டியே ஆகவேண்டும்.

.

அதேவேளை காணாமல் போனவர்கள் தொடர்பாகவும். இன அழிப்பிற்கு நீதி கோரியும் இறுக்கமான செயற்பாடுகளை நாம் முன்னெடுப்போம்.பெரும்பாண்மை கிடைத்துள்ள புதிய அரசாங்கம் எங்களை திரும்பியே பார்க்க வேண்டிய தேவை இல்லை. எந்த தரப்பின் ஆதரவும் அவர்களிற்கு தேவையில்லை.

அவர்கள் போர்க்குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படுபவர்களாக இருக்கின்றார்கள். எனவே பொறுப்புக்கூறல் என்ற விடயத்தை இறுக்கமாக முன்னெடுப்பதன் ஊடாக மாத்திரமே அவர்கள் எங்களை திரும்பி பார்க்கும் நிலைமை உருவாகும்.”என தெரிவித்தார்.