வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இம் மாதம் 24 திகதியிலிருந்து 28ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள மஹா கும்பாபிஷேக நிகழ்வு ஏற்பாட்டுக்கான கலந்துரையாடல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் மாவட்ட அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது .
சுகாதார நடைமுறைகளுடன் இடம்பெறவுள்ள மஹா கும்பாபிஷேக நிகழ்வுகளின் ஏற்பாடுகள் குறித்தும், நடைமுறைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன் அதற்கான ஆயத்த முன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பொறுப்புக்களையும் உரிய தரப்புக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .
பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் ஆரயப்பட்டுள்ளது மின்சாரம் வழங்கும் முறைகள் சுகாதார நடைமுறைகள், ஊடகம் ஒளிபரப்பு என்பன கலந்துரையாடப்பட்டுள்ளது .
வவுனியா சிவன் ஆலயத்தில் 12 வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறவுள்ள மஹா கும்பாபிஷேகம் நிகழ்வுகள் இவ்வருடம் 3 ஆவது தடவையாக இடம்பெறவுள்ளது .
இன்றைய கலந்துரையாடலின் போது மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் , வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , சுகாதார உத்தியோகத்தர்கள் , மாவட்ட கலாச்சார அலுவலகர் , உதவி பிரதேச செயலாளர் , மின்சார சபை அதிகாரி , போக்குவரத்துப்பொலிஸ் பொறுப்பதிகாரி, ஆலய நிர்வாக தலைவர் , செயலாளர் , உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டுள்ளனர்.