பருத்தித்துறை தும்பளை பகுதியில் வாடி அமைத்து தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபடுவோரது நான்கு வாடிகள் விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
குறித்த கடலட்டை வாடியில் இரண்டு மாதங்களுக்கு மேலாக தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் அண்மையில் தமது சொந்த இடமான சிலாவத்தை பகுதிக்கு தமது ஊர் தேவாலயம் ஒன்றின் திருநாளிற்க்காக சென்றிருந்ததாகவும் அவ்வாறு சென்றிருந்த போது தமது தொழில் உபகரணங்களை பாதுகாப்பாக ஒருவரது வீட்டில் பாதுகாப்பிற்க்காக வைத்துச் சென்றுள்ள நிலையிலேயே இத் தீக்கிரையாக்கும் சம்பவம் இடம் பெற்றிருக்கிறது.
இது தொடர்பில் பருத்தித்துறை போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.