வவுனியா சேமமடு பகுதியில் இன்றையதினம் அதிகாலை ஊருக்குள் புகுந்த யானைகள் இரண்டு வீடுகளை சேதப்படுத்தி சென்றுள்ளதுடன், வீட்டில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நெல்லினையும் உண்டுவிட்டு சென்றுள்ளது.
சேமமடு கிராமத்தில் தொடர்சியாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதுடன் இதனால் பயிர்ச்செய்கை உட்பட ஏனைய செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிப்பதுடன். நீண்டகாலமாக தொடர்ந்து வருகின்ற இப்பிரச்சனையை நிவர்த்தி செய்து யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை சேமமடுப்பகுதியில் யானையின் தாக்குதலிற்கு இலக்காகி கடந்த வருடங்களில் ஒருவர் மரணமடைந்திருந்ததுடன், ஒருவர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.