ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் நிரைவு!

ஐக்கிய தேசிய கட்சி  தலைமை பதவி மற்றும் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எவ்வித தீர்வுமின்றி நிறைவடைந்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.

எவ்வாறாயினும் தேசிய பட்டியில் உறுப்பினர்கள் தொடர்பிலான பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தும் இறுதி தினம் நாளை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ லங்கா பொதுஜனபெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்ரஸ் தற்போது தேசிய பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.