கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு இணங்க முடியாது

mahinda
mahinda

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு நிபந்தனைகளுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி இணங்காது என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

“கூட்டமைப்பினால் இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் நிபந்தனைகள் அடங்கிய ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. எனினும், எனது கைகளுக்கு அது இன்னும் கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைத்தால் அதற்கு இணங்க முடியாது. கூட்டமைப்பு முன்வைக்கும் எந்தவொரு நிபந்தனைகளுக்கும் நாங்கள் அடிபணிய போவதில்லை. நாடு எமக்கு முக்கியம். நாட்டை பிரிப்பதற்கு இடமளிக்க முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.