எம்.பி அலி சப்ரிக்கு எதிராக நீதிமன்றத்தை நாட உள்ள சிங்கள அமைப்பு ஒன்றின் தலைவர்!

3E8UIhd
3E8UIhd

முகமட் அலி சப்ரிக்கு புதிய அரசாங்கத்தில் நீதி அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டதுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்போவதாக சிங்கள அமைப்பு ஒன்றின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணியாக இருந்த அலி சப்ரிக்கு இந்த அரசாங்கம் நீதி அமைச்சிப் பொறுப்பை வழங்கியதன் மூலம் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துளள்ளார்.

நீதி அமைச்சர் அலிசப்ரிக்கு எதிராக தாங்கள் ஏற்கனவே வழக்குத் தாக்கல் ஒன்றை செய்துள்ளதால் அவர் தற்போது வகிக்கும் நீதி அமைச்சி பதவி மூலம் எங்களுடைய அடிப்படை உரிமை மீறப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் சம்பந்தமாக தாங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.