கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கு வருகை தர முடியாமல் மாலைத்தீவில் சிக்கியிருந்த 176 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
இன்று பிற்பகல் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.