கோத்தபாயவுக்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி!

gotaw
gotaw

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா – கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கே இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக செயற்பட்ட கோத்தபாய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அது தொடர்பாக தனக்கு நட்ட ஈடு பெற்றுத் தருமாரு கோரியும் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றில் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க குறித்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த வழக்கை தள்ளுபடி செய்வதாக கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.