நுண்கடன்களைப் பெற்று அவதியுறுகின்ற பெண்களின் கடன்களை தாம் ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர், இரத்து செய்யவிருப்பதாக, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பு – சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் அவ்வாறு அதிக வட்டியை அறவிடும் நிறுவனங்களில் கடன்பெற்றுள்ள பெண்களின் கடனை ரத்து செய்வதற்காக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.