கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யக்கல வீதி – பண்டாரவத்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரின் வீட்டிலிருந்து வெட்டப்பட்ட நிலையில் இன்று (18.08.02020) சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
60 வயதுடைய நபரே ஒருவரே இவ்வாறு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.