2 துப்பாக்கிகள் மற்றும் 2 வாள்கள் மீட்பு:நபர் ஒருவர் கைது!

arest 4
arest 4

தங்கல்ல –நெடொல்பிட்டிய பகுதியில் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது 2 துப்பாக்கிகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 2 துப்பாக்கிகள் மற்றும் 2 வாள்கள் ஆகியன கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நெடொல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.