ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது!

adasdf1
adasdf1

பன்னிப்பிட்டிய கெந்தஹேனவத்த பிரதேசத்தில் சிற்றூந்து மூலம் ஹெரோயின் போதை பொருளை கொண்டு செல்ல முயற்சித்த பெண் ஒருவர் 22 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெந்தஹேவத்த பிரதேசத்தினை சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான குறித்த பெண்ணின் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றில் இருந்து குறித்த போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது இரு கைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பெண் ஹோமகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.