போதை பொருள் வர்த்தக குற்றச்சாட்டில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட அரச இரசாயண திணைக்களத்தின் உத்தியோகத்தரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள காவல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துறுகிரிய காவல்துறையினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட பலங்கொட – வதுகாரகொட பிரதேசத்தினை சேர்ந்த 22 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.