பதவியை ஞானசார தேரருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்:ஓமல்பே சோபித்த தேரர்!

download 34
download 34

எங்கள் மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியை கல கொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்படுவதற்கு ஏற்றவர் ஞானசார தேரரே என்றும், தேசிய பட்டியல் உறுப்பினர் பதவி அவருக்கு வழங்கப்படும்” என்று தேர்தலுக்கு முன்னர் ரதன தேரர் தெளிவாகக் கூறியுள்ளார்.

கூறியதைப் போன்று ஞானசார தேரருக்கு தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையின் படி செயற்படுவது ரதன தேரரின் பொறுப்பு என சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

பதவிக்காக இந்த வகையில் சர்ச்சையை ஏற்படுத்துவது வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் கவலை அளிக்கும் விடயமாகும். அதேபோல் புத்த சாசனத்திற்கு அவமானம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.