யாழ். போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தமிழ் வைத்தியர் ஒருவரை சிங்கள மக்கள் கடவுளாக பார்ப்பதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கண் வைத்தியராக பணியாற்றும் முத்துசாமி மலரவன் குறித்து வடக்கு மக்களுக்கு பெரிதாக தெரியாத போதிலும் சிங்கள மக்கள் அவரை பெரிதும் கொண்டாடி வருவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அனுராதபுரம், மதவாச்சி, பதவிய, கெபத்திகொல்லாவ போன்ற சிங்கள விவசாய கிராமங்களில் வாழும் வறுமையான மக்கள் அவரை இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.