தொடர் கடை உடைப்பு: முக்கிய குற்றவாளி கைது!

Screenshot 20200102 113942 1
Screenshot 20200102 113942 1

வவுனியாவில் கடைகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர்.

அந்தவகையில் கடந்த ஒரு மாதகாலப்பகுதிக்குள் வவுனியாவின் நெளுக்குளம், குருமன்காடு, குளுமாட்டுச்சந்தி, வைரவபுளியங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களை உடைத்து திருட்டில் ஈடுபட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன்.
அவரிடமிருந்து தொலைபேசி அட்டைகள், மூன்று தொலைபேசிகள், சிம்காட், பவர்வாங், வங்கி புத்தகம், ஏடிஎம் அட்டை உட்பட சில பொருட்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடுவின் வழிகாட்டலில், உபபொலிஸ் பரிசோதகர், பிரனீத் திசாநாயக்க, தலைமையில், சாயன்களான ரஞ்சித், ஏக்கநாயக்க, விக்கிரமசூரிய, கான்ஸ்டபிள் தயாளன் ஆகியோரை கொண்ட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது

குறித்த சம்பவத்தில் புதுக்குடியிருப்பை சேர்ந்த வவுனியா கூமாங்குளத்தில் தற்காலிகமாக வசித்துவரும் நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன்
நாளையதினம் நீதி மன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.