இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினரான தர்ஷன பிரதீப் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தங்காலையில் உள்ள மாரக்கொல்லிய பகுதியில் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக தங்காலை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி மூலம் போட்டியிட்ட தங்காலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், ரண்ணாவிலில் வசிப்பவருமான தர்ஷன பிரதீப் என்பவரே பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் தங்காலையில் உள்ள மாரக்கொல்லிய பகுதியில் உறவினரின் திருமண விருந்தில் கலந்து கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரசியல் சம்பவம் காரணமாக இரு குழுக்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் 15 பேர் கொண்ட குழு இவர் மீதும் மற்றும் அவரது குழுவையும் தாக்கியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.