நாளை காலை 10 மணிமுதல் பிற்பகல் 03 மணி வரையான 05 மணிநேர காலப்பகுதிக்கு ஹம்பலாங்கொடை மற்றும் பலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களை அண்மித்த பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
பத்தேகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சார துண்டிப்பு ஏற்படுத்தப்பட உள்ளதால் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய,ஹம்பலாங்கொடை,ஹிக்கடுவ,பலப்பிட்டிய,பென்தொட்ட,எல்பிட்டிய,படபொல மற்றும் பத்தேகம அகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.