துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் மரணம்!

adfaf2
adfaf2

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – காலி பிரதான வீதியில், பெரட் சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 8.55 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர் மீது, இனந்தெரியாத ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர், பலப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

இத்துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபரை அடையாளம் காண்பதற்காக, அம்பலாங்கொடை தலைமையகப்  பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளன.