கனகராயன்குளத்தில் காயங்களுடன் சடலம் மீட்பு!

IMG 2213
IMG 2213

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று இன்று காலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீட்டொன்றின் அருகாமையில் சடலம் ஒன்று இருப்பது தொடர்பாக கனகராயன்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தினை அடையாளப்படுத்தியதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சடலத்தில் காயங்கள் காணப்படுகின்ற நிலையில் கொலை என்ற ரீதியில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த சடலத்தினை வவுனியா நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்லீமா பௌசானா நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

சம்பவத்தில் க. இந்திரகுமார் (வயது 75) என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.