கிளிநொச்சி, பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் நால்வர் கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை வைத்து இம்மாணவர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.