அங்கொட லொக்கா எனப்படும் பாதாள உலகக்குழு உறுப்பினரின் பிரதான உதவியாளரான சமிந்த சந்தமால் எதிரிசூரிய மீது காவல் துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் கம்பஹா பகுதியில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த நபர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த போது அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் பாதிக்கப்பட்ட சமிந்த சந்தமால் எதிரிசூரிய உயிரிழந்துள்ளார் எனவும் காவல் துறை குறிப்பிட்டுள்ளது.